கடல் சீற்றத்தின் போது அதிகமான அலை வேகம் மற்றும் கூளங்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, கடலோரத் தாவரங்கள் ஒரு நிலையான பாதுகாப்புக் கட்டமைப்பாக செயல்படுகின்றன.

Ecology

பெங்களூரு

“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”
-54:1 குற்றாலக்குறவஞ்சி
(குறத்தி மலைவளங்கூறுதல்)

என குற்றால மலையின் அழகை விவரிக்கும் போது ஆண் குரங்குகள் (வானரம்) பெண் குரங்குகளிடம் (மந்தி) கனிகளைக்கொடுத்து  சைகைகள் மூலம் கொஞ்சி விளையாடும் அழகிய காட்சியினை “குற்றாலக் குறவஞ்சியில்” 18ஆம் நூற்றாண்டிலேயே ஆவணப்படுத்தியுள்ளார்  திரிக்கூடராசப்பக்கவிராயர். 

பெங்களூரு

“முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்,
வருவம்’ என்னும் பருவரல் தீர,
படும் கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி…….”,

169 - நற்றிணை

பெங்களூரு

பல்லுயிர் ஓம்புதலிலும் இயற்கையினை கூர்நோக்கி உணருவதிலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளாகவே சிறந்து விளங்கியிருந்துள்ளனர் என்பதற்கு பல சங்க இலக்கியங்கள் சான்றாக நிற்கின்றன. நிலப்பரப்புகளை ஐந்து வகைகளாக பிரித்த நம் இலக்கியங்கள் அவற்றின் உட்பிரிவுகளையும் அவ்வப்போது உற்று நோக்கியிருந்துள்ளன.

“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது” - (அதிகாரம்:வான் சிறப்பு, குறள் எண்:16)

கேரளா

தன் நீலநிறப்பூக்களால் மலையினை நீலப்போர்வையால் போர்த்தி, நீலகிரி மலை எனப்பெயர் பெற வைத்த அதிசய தாவரம் நீலக்குறிஞ்சி. ஸ்ட்ரோபிலன்தஸ் குந்தியானஸ் (Strobilanthes kunthianus) என்ற அறிவியல்  பெயரால் அறியப்படும் இவ்வகை குறிஞ்சி, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு  ஒரு முறை மட்டுமே மலரும் தன்மையுடையதாகும், ஸ்ட்ரோபிலன்தஸ் என்ற இத்தாவரபேரினத்தில் சுமார் 350 வகை சிற்றினங்கள் உள்ளடங்கியுள்ளது. சென்ற வருடம் மேற்குத்தொடர்ச்சிமலைகளில் மலர்ந்து அனைவரையும் கவர்ந்த குறிஞ்சி மலர்கள், தமிழகம் மற்றும் கேரள  ஆராய்ச்சியாளர்கள் புது வகைகளை கண்டுபிடிக்க உறுதுணையானது.

Bengaluru

“சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கரு இருந்து ஈன்று.....”
– 53 - நந்திகலம்பகம் - சீவகசிந்தாமணி

அரும்பிவரும் நெல் பயிர்களானது பார்பதற்கு பச்சைப்பாம்பின் உடலை ஒத்திருக்கும் என்னும் உவமையுடன் துவங்குகிறது திருத்தக்க தேவரின் சீவகசிந்தாமணி பாடலொன்று. பச்சைப்பாம்புகளின் உருவவியலை உற்றுநோக்கி பல நூற்றாண்டுகளுக்கு முன் இலக்கியங்களில் பதிவிட்டதன் மூலம் நம்மைச்சுற்றியுள்ள நிலப்பரப்புகளில் அன்றே பச்சைப்பாம்புகள் உலவியிருந்ததை ஆவணப்படுத்தியுள்ளனர் நம் தமிழ் மறவர்கள்.

பெங்களூரு

அசோகா சுற்றுசூழலியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் குப்பி ஆய்வகமும் சேர்ந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பாகக் காடுகள் 11 வருட காலத்தில் எப்படி மீளுருவாக்கம் அடைகின்றன என்று காப்பகப்படுத்திஇருக்கின்றன.

பெங்களூரு

“அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை..”
453

இந்தூர்

மனித செயல்பாடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பாதிக்கும் மேற்பட்ட இந்திய ஆறுகளின் நீர்பிடிப்புப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல்.

ஸ்ரீநகர்

பரந்து விரிந்த இந்தியா தீபகற்பத்தின் மேற்குப் பரப்பில், அழகிய மலைத் தொடர்களின் அணிவகுப்பாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை உலகின்  பல்லுயிரியற் காடுகளில் மிக முக்கியமான ஒன்றாகும். உலகில் அச்சுறுத்தப்பட்ட இனங்களில், சுமார் 325 உயிரினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகின்றன. அவற்றில் பல உயிரினங்கள் வேறெங்கும் காணப்படாது இந்த நிலவியல் அமைப்புக்கு மட்டுமே உரித்தான அகணிய உயிரிகளாகும் (Endemic organisms).  அகணிய உயிர்கள், உட்பிரதேசத்திற்குரிய உயிரி என்றும் அழைக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்

சிலவகை பல்லிகளில் காணப்படும் வரிகளும் வண்ணமிகு வால்களும், அவற்றை தங்கள் கொன்றுண்ணிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுவதாக கண்டறிந்துள்ளது ஆய்வு!