கடல் சீற்றத்தின் போது அதிகமான அலை வேகம் மற்றும் கூளங்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, கடலோரத் தாவரங்கள் ஒரு நிலையான பாதுகாப்புக் கட்டமைப்பாக செயல்படுகின்றன.

SciQs

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ்  தீவுகளில் பிற இடங்களைப்போல் விலங்குகள்-கடக்கும் பாதைகள் உள்ளன. ஆனால், அங்கே அந்தப் பாதைகளைக் கடப்பது எச்சரிக்கை பலகைகளை வாசித்துவிட்டு சாதாரணமாக கடந்துசெல்லக்கூடிய எளிதான காரியம் இல்லை. மாறாக, போக்குவரத்து சீரமைப்பு, பொது அறிவுப்புகள், நிரந்தர பாலங்கள் என பல ஏற்பாடுகள் தேவை! இது அங்கே கூட்டமாகச் சாலைகளைக் கடந்து செல்லக்கூடிய நண்டுகளை வழியனுப்ப மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள். இந்தக் கண்கவர் நிகழ்வு வருடந்தோறும் நிகழும் ஓர் இயற்கையின் விந்தையாகும்.

பறவைகளின் கூட்டிசையோடு துவங்கும் ஒரு நாளைவிட ஒரு அழகான நாள் இருந்துவிட முடியுமா? பல்வேறு சுருதி மற்றும் இசை நுணுக்கங்களுடன் இப்பறக்கும் பாடகர்கள், கவனிப்பவர்களின் காதுகளுக்குத் தினந்தோறும் ஓர்  இசை விருந்து வைக்கின்றனர் என்றால் அது மிகையாகாது. தங்களின் பெயர்களுக்கேற்ப பாடல் பறவைகள் விரிவான பாடல்களைப் பாடும் திறன் கொண்டவை. சிட்டுக்குருவிகள், ராபின்கள், கதிர்க்குருவிகள், காகங்கள் போன்ற 5000க்கும் மேற்பட்ட சிற்றிங்களைக்கொண்ட பாடல் பறவைகள் சராசரியாக ‘அழைப்பு’ மற்றும் ‘பாடல்’ என்னும் இரண்டு வகை சத்தங்களை  எழுப்பக்கூடியவை.

கண்கவர் வண்ணங்கள், வியத்தகு வடிவங்கள், திடமான நறுமணம் என பல இயல்புகள் மூலம் மலர்கள் தங்களின் மகரந்தச்சேர்க்கையாளர்களை  ஈர்க்கின்றன. சொல்லப்போனால், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் இதர மகரந்தச்சேர்க்கை செய்யும் பூச்சிகள்  தங்களுக்கென ஒரு விருப்பப்பட்டியலை வைத்து  மலர்களைத் தேர்ந்தெடுத்துச் செல்லும் திறன் கொண்டவை என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த மலர்த்தேர்வு விருப்பங்கள்  சூழ்நிலை மாற்றங்களுக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடியவை என்பது கூடுதல் தகவல்.

Search Research Matters