கடல் சீற்றத்தின் போது அதிகமான அலை வேகம் மற்றும் கூளங்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, கடலோரத் தாவரங்கள் ஒரு நிலையான பாதுகாப்புக் கட்டமைப்பாக செயல்படுகின்றன.

Science

மும்பை

மீநுண் தொழில்நுட்பம் எனப்படும் “நானோ தொழில்நுட்பம்” இன்று அறிவியலில் மிகப்பெரும் மாற்றத்தினை உண்டாக்கி வருகின்றது. மூலக்கூறு அளவிலும் கூட பருப்பொருட்களை கையாளும் தொழில்நுட்பமே மீநுண் தொழில்நுட்பம். மீநுண் துகள்கள் கரிமம் சார்ந்த மற்றும் சாராதவை என இரு வகைகளில் உள்ளன, இவைகள் மிக நுண்ணிய அளவினைக் கொண்டதாகும். இப்படிப்பட்ட மீநுண் பொருட்களை, அகச்சிவப்பு ஒளியின் (Infrared light) உதவியுடன் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வகை மீநுண் தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் சிகிச்சையில்  புதிய நம்பிக்கையினை விதைத்துள்ளது.

பெங்களூரு

பல்லுயிர் ஓம்புதலிலும் இயற்கையினை கூர்நோக்கி உணருவதிலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளாகவே சிறந்து விளங்கியிருந்துள்ளனர் என்பதற்கு பல சங்க இலக்கியங்கள் சான்றாக நிற்கின்றன. நிலப்பரப்புகளை ஐந்து வகைகளாக பிரித்த நம் இலக்கியங்கள் அவற்றின் உட்பிரிவுகளையும் அவ்வப்போது உற்று நோக்கியிருந்துள்ளன.

“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது” - (அதிகாரம்:வான் சிறப்பு, குறள் எண்:16)

சென்னை

நம் பள்ளிகளில் மாணவர்களுக்கு பெரும் சவாலாகவுள்ள காரணிகள் எவை தெரியுமா? நீண்ட நேர வகுப்புகளும், மாணர்வர்களின்  கிரகிக்கும் திறனும், கூடவே அவர்களின் பார்வைக்கூர்மையும் ஆகும். ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை பள்ளிகளில் செலவழிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் வகுப்பறைகள் கல்வி கற்க போதுமான சூழலை உருவாக்குகிறதா?

கேரளா

தன் நீலநிறப்பூக்களால் மலையினை நீலப்போர்வையால் போர்த்தி, நீலகிரி மலை எனப்பெயர் பெற வைத்த அதிசய தாவரம் நீலக்குறிஞ்சி. ஸ்ட்ரோபிலன்தஸ் குந்தியானஸ் (Strobilanthes kunthianus) என்ற அறிவியல்  பெயரால் அறியப்படும் இவ்வகை குறிஞ்சி, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு  ஒரு முறை மட்டுமே மலரும் தன்மையுடையதாகும், ஸ்ட்ரோபிலன்தஸ் என்ற இத்தாவரபேரினத்தில் சுமார் 350 வகை சிற்றினங்கள் உள்ளடங்கியுள்ளது. சென்ற வருடம் மேற்குத்தொடர்ச்சிமலைகளில் மலர்ந்து அனைவரையும் கவர்ந்த குறிஞ்சி மலர்கள், தமிழகம் மற்றும் கேரள  ஆராய்ச்சியாளர்கள் புது வகைகளை கண்டுபிடிக்க உறுதுணையானது.

Bengaluru

“சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கரு இருந்து ஈன்று.....”
– 53 - நந்திகலம்பகம் - சீவகசிந்தாமணி

அரும்பிவரும் நெல் பயிர்களானது பார்பதற்கு பச்சைப்பாம்பின் உடலை ஒத்திருக்கும் என்னும் உவமையுடன் துவங்குகிறது திருத்தக்க தேவரின் சீவகசிந்தாமணி பாடலொன்று. பச்சைப்பாம்புகளின் உருவவியலை உற்றுநோக்கி பல நூற்றாண்டுகளுக்கு முன் இலக்கியங்களில் பதிவிட்டதன் மூலம் நம்மைச்சுற்றியுள்ள நிலப்பரப்புகளில் அன்றே பச்சைப்பாம்புகள் உலவியிருந்ததை ஆவணப்படுத்தியுள்ளனர் நம் தமிழ் மறவர்கள்.

பெங்களூரு

அசோகா சுற்றுசூழலியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் குப்பி ஆய்வகமும் சேர்ந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பாகக் காடுகள் 11 வருட காலத்தில் எப்படி மீளுருவாக்கம் அடைகின்றன என்று காப்பகப்படுத்திஇருக்கின்றன.

பெங்களூரு

“அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை..”
453

இந்தூர்

மனித செயல்பாடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பாதிக்கும் மேற்பட்ட இந்திய ஆறுகளின் நீர்பிடிப்புப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல்.

பெங்களூரு

தமிழ் நாட்டில் இருந்து கண்டறியப்பட்ட இரும்பு காலத்தை சேர்ந்த உலோக பண்டங்கள், தமிழரின் பண்டைய உலோகவியல் அறிவை பறைசாற்றுகிறது.

ஸ்ரீநகர்

பரந்து விரிந்த இந்தியா தீபகற்பத்தின் மேற்குப் பரப்பில், அழகிய மலைத் தொடர்களின் அணிவகுப்பாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை உலகின்  பல்லுயிரியற் காடுகளில் மிக முக்கியமான ஒன்றாகும். உலகில் அச்சுறுத்தப்பட்ட இனங்களில், சுமார் 325 உயிரினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகின்றன. அவற்றில் பல உயிரினங்கள் வேறெங்கும் காணப்படாது இந்த நிலவியல் அமைப்புக்கு மட்டுமே உரித்தான அகணிய உயிரிகளாகும் (Endemic organisms).  அகணிய உயிர்கள், உட்பிரதேசத்திற்குரிய உயிரி என்றும் அழைக்கப்படுகிறது.

Search Research Matters